Friday, October 30, 2009

இன்றைய சிந்தனை



கருவூலம்


...பாம்பைக் கம்பால் அடிக்க வேண்டும்.
வலை வீசியும் தூண்டிலிட்டும் மீனைப் பிடிக்க வேண்டும்.
பறவையைக் கண்ணிவைத்து மடக்க வேண்டும்.
ஆனால்-
தூண்டிலிட்டு பாம்பைப் பிடிக்க முடியாது.
கம்பாலடித்து பறவையைப் பிடிக்க முடியாது.
பயங்கர மிருகங்களை கொல்வதற்கு பயங்கர ஆயுதங்கள் தேவை....
கணையும் வில்லும் கையிலே தாங்கி ''புலி எங்கே? சிங்கம் எங்கே?'' என்று புறப்படுவோர் மானைப் பார்த்து மயங்கி விழுந்தால், மலர்களைப் பார்த்து சொக்கி நின்றால், வேட்டையும் நடக்காது, விரும்பியதும் கிடைக்காது.
அவன் புறப்பட்டது என்னவோ வேட்டைக்குத் தான். வேட்டையாடும் நேரமும் தூரமும், அவன் கண்களுக்கு விலகியே போய்க் கொண்டிருந்தன...
-கவிஞர் கண்ணதாசன்
(வனவாசம்)

No comments:

Post a Comment