Tuesday, October 13, 2009

மரபுக் கவிதை - 31


கலப்புத் திருமணம் செய்வீர்!

கலப்புத் திருமணம் செய்வீர்!
கலியென இங்குள ஜாதியை மாய்ப்பீர்!
கலப்புத் திருமணம் செய்வீர்!

முதலியும் பிள்ளையும் ஒன்றே!
முக்குலத்தோர்களும் ஒன்றே!
கவுண்டனும் செட்டியும் ஒன்றே!
ஹரிஜனும் நாயுடும் ஒன்றே!
வன்னியர், அந்தணர் ஒன்றே!
வகைமிகு பற்பல ஜாதியும் ஒன்றே!

கலப்புத் திருமணம் செய்வீர்!

அனைவரின் குருதியும் செம்மை - நாம்
அனைவரும் ஆண்டவன் பொம்மை!
மனிதருள் வெறுப்புகள் ஏனோ?
மதியது வெற்றிடம் தானோ?
உலகினில் ஜாதிகள் இரண்டு!
உடலதால் பெண்களும் ஆண்களும் உண்டு!

கலப்புத் திருமணம் செய்வீர்!

No comments:

Post a Comment