Friday, October 16, 2009

புதுக்கவிதை - 28


அறியாமைப் படிகள்

ராமராஜ்யத்தில் தான்
இன்று
அறியாமை
ஆட்சி செலுத்துகிறது.

எங்கள் அறியாமையையும்
படிகளாக்கிக் கொண்ட
அறிவிஜீவிகள் தான்
எங்களை
ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

கோகுலங்கலெல்லாம்
கோவாக்கள் ஆகிவிட்டதால்
கோவர்த்தனகிரியின் கீழ்
சிக்கித் தவிக்கிறோம்
நாங்கள்.

சாணக்கியன்
வாழ்ந்த நாடா இது?
சாக்கடை நாற்றம்
அடிக்கிறது?

No comments:

Post a Comment