Tuesday, October 27, 2009

புதுக்கவிதை - 34


இன்னும் கொஞ்சம்

இன்னும் கொஞ்சம்
நுகர்ந்திருக்கலாம்-
வாடிவிட்டது
வாசமலர்.

இன்னும் கொஞ்சம்
சுவைத்திருக்கலாம்-
நிரம்பிவிட்டது
வயிறு.

இன்னும் கொஞ்சம்
ரசித்திருக்கலாம்-
முடிந்துவிட்டது
கச்சேரி.

இன்னும் கொஞ்சம்
களித்திருக்கலாம்-
இருட்டிவிட்டது
மாலைவானம்.

இன்னும் கொஞ்சம்
கூடியிருக்கலாம்-
தளர்ந்துவிட்டது
உடல்.

இன்னும் கொஞ்சம்
வாழ்ந்திருக்கலாம்-
பிரிந்துவிட்டது
உயிர்.

இன்னும் கொஞ்சம்
எழுதலாம் தான்-
படிக்க நீங்கள்
தயார் தானா?

No comments:

Post a Comment