திருநெல்வேலி, டிச. 18: திருநெல்வேலி மாவட்டம், உவரியைச் சேர்ந்த
எழுத்தாளரும்
தனியார் சரக்குப் போக்குவரத்து நிறுவன அதிகாரியுமான ஜோ டி குரூஸ் (51) எழுதிய 'கொற்கை' நாவல் நிகழாண்டு (2013) இலக்கியத்துக்கான
சாகித்ய
அகாதெமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட கடலோரக் கிராமங்களில் ஒன்று உவரி. இந்தக்
கிராமத்தில்
பிறந்து வளர்ந்த இவர்,
பள்ளிக்
கல்வியை திருநெல்வேலி தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியிலும், உயர்கல்வியை சென்னை லயோலா
கல்லூரியில்
எம்.ஏ., பொருளாதாரமாகப் பயின்றவர்.
திருச்சி ஜோசப் கல்லூரியில் எம்.பிஃல். பயின்றார்.
இவர் ஏற்கெனவே 'ஆழிசூழ் உலகு' எனும் நாவலை எழுதியுள்ளார்.
அந்த
நாவலுக்கே
சாகித்ய அகாதெமி விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது, இவரது 'கொற்கை' நாவலுக்கு இந்த விருது
கிடைத்துள்ளது.