Monday, August 5, 2013

எழுத்தாளர் ஜெயமோகனின் அற்புத முயற்சி


தமிழின் முன்னணி எழுத்தாளரும் முன்னுதாரணமான திரைப்பட வசனகர்த்தாவாக ஜொலித்து வருபவருமான திரு. ஜெயமோகன், தனது இணையதளத்தில்  புதிய எழுத்தாளர்களின் கதைகளை வெளியிட்டு வருகிறார்.

அவரது சொல்புதிது இணைய குழுமத்தில் நண்பர்களான, அவரது வழிகாட்டுதலில் பட்டை தீட்டப்பட்ட பலரது சிறுகதைகள் அதில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மிகவும் தன்னம்பிக்கையும் பெருந்தன்மையும் இல்லாமல், இவ்வாறு இளம் எழுத்தாளர்களின் கதைகளை தனது சொந்தத் தளத்தில்  வெளியிட முடியாது. ஜெயமோகனால் கண்டுகொள்ளப்பட்ட இந்த புதிய எழுத்தாளர்கள் அனைவரும் பாக்கியவான்கள்.


தமிழில் மணிக்கொடிக்காலம்,  வானம்பாடிக்காலம், சரஸ்வதி காலம், எழுத்து காலம், என்று பல இலக்கிய இயக்கங்கள் குறிப்பிடப்படுவதுண்டு. அந்த வகையில் இது ஜெயமோகனின் காலம். அவரது தாக்கத்தால் உருவான புதிய இளம் தலைமுறை எழுத்தாளர்கள் இவர்கள்.

ஜெயமோகனின் அறம் சிறுகதைகளின் தொடருக்குப் பிறகு மிகுந்த நெகிழ்ச்சியூட்டும் கதைகளாகவும், நம்பிக்கை அளிக்கும் வாரிசுகளைக் காட்டுவதாகவும் இக்கதைகள் அமைந்துள்ளன. ஒரு புதிய குருகுலம் உருவாகி வந்திருக்கிறது- ஆர்ப்பாட்டமின்றி, அற்புதமான ஒளிக்கீற்றுடன். ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி!

இக்கதைகள் ஒவ்வொன்றும் ஒரு ரகம். இதுகுறித்து பின்னர் விரிவாக எழுதத் திட்டம். இப்போதைக்கு, புதிய கதைகளின் இணைப்புகள் கீழே...

12. பயணம் சிவேந்திரன் 
11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் 
10. வேஷம் பிரகாஷ் சங்கரன் 
9. கன்னிப்படையல் ராஜகோபாலன் 
8. சோபானம் ராம்
7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்
6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் 
4. தொலைதல் ஹரன் பிரசன்னா 
3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார்
2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி 
1. உறவு தனசேகர் 

No comments:

Post a Comment