Saturday, January 26, 2013

ராகுல் காந்தியும் ராஜ்நாத் சிங்கும் நமது ஊடகங்களும்


நான்கு நாட்கள் இடைவெளியில் நாட்டின் இரு தேசியக் கட்சிகளில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவ்விரு நிகழ்வுகளிலும் நமது ஊடகங்களின் செயல்பாடு, நமது அரசியல் ஞானம் குறித்த கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளது.

முதலாவதாக, கடந்த ஜனவரி 19-ஆம் தேதி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் சிந்தனை ஷிபிர் கூட்டத்தில், கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்து, கடந்த ஜனவரி 23-ஆம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற உள்கட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்த ராஜ்நாத் சிங் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஊழல் புகாரால் தங்கள் கட்சித் தலைவர் கட்கரி தத்தளித்து வந்த நிலையில், இந்நிகழ்வு அக்கட்சியினருக்கு ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது.