திருப்பெரும்புதூரில் அவதரித்த
திருமாலின் இளையவன்.
திருக்கச்சியுறை வரதராசனின்
ஆணைவழி நடந்த அடியவன்.
திருவரங்கம் கோயில் புதுமை செய்த
கைங்கர்ய வல்லுநன்.
திருவேங்கடத்தைப் பேரரசாக்கிய
திண்மை மிக்க மன்னவன். 1
சங்கு, சக்கரம் தோள்களில் பொறித்து
சங்கல்பம் நிறைவேற்றிய சநாதனன்.
தாழ்த்தப்பட்டோரையும் கோயிலில் நுழைத்து
சாதனை செய்த புரட்சியாளன்.
திவ்யப் பிரபந்தங்களை பிரபலப்படுத்த
தெய்வம் அருளிய தமிழ் முனி.
வடமொழியில் கரைகண்ட வேதவித்து.
ஸ்ரீபாஷ்யம் கண்ட வைணவ முத்து. 2
‘ஏ.ஐ.’: விசுவரூப வளர்ச்சி
-
சென்னையில் இயங்கும் காம்கேர் சாஃப்ட்வேர் என்ற தகவல் தொழில்நுட்ப
நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் காம்கேர் கே. புவனேஸ்வரி. இவர், செயற்கை
நுண்ணறிவு (ஏ.ஐ....
1 week ago