Thursday, December 15, 2016

நமக்கெலாம் காப்பு!



திருப்பெரும்புதூரில் அவதரித்த
திருமாலின் இளையவன்.
திருக்கச்சியுறை வரதராசனின்
ஆணைவழி நடந்த அடியவன்.
திருவரங்கம் கோயில் புதுமை செய்த
கைங்கர்ய வல்லுநன்.
திருவேங்கடத்தைப் பேரரசாக்கிய
திண்மை மிக்க மன்னவன். 1

சங்கு, சக்கரம் தோள்களில் பொறித்து
சங்கல்பம் நிறைவேற்றிய சநாதனன்.
தாழ்த்தப்பட்டோரையும் கோயிலில் நுழைத்து
சாதனை செய்த புரட்சியாளன்.
திவ்யப் பிரபந்தங்களை பிரபலப்படுத்த
தெய்வம் அருளிய தமிழ் முனி.
வடமொழியில் கரைகண்ட வேதவித்து.
ஸ்ரீபாஷ்யம் கண்ட வைணவ முத்து. 2

Tuesday, June 14, 2016

அன்பர்களுக்கோர் அறிவிப்பு...



.

உங்களுக்காகக் காத்திருக்கிறது மேம்படுத்தப்பட்ட புதிய வலைப்பூ..


குழலும் யாழும் வலைப்பூவின் தொடர்ச்சியாக,

 

வேர்ட்பிரஸ் தளத்தில் 

 

மேம்படுத்தப்பட்ட புதிய வலைப்பூ

 

அன்பர்களின் கவனத்துக்காகக் காத்திருக்கிறது...

 

 அதன் முகவரி:

 

https://writervamumurali.wordpress.com/


இனிமேல் அதில் தொடர்ந்து எனது ஆக்கங்கள் இடம் பெறும். 

 

 

.