Thursday, October 22, 2009

மரபுக் கவிதை - 36


அற்ப மானுடன் அல்லன்

அற்ப மானுடன் அல்லன் - நான்
அற்புதங்களை ஆற்ற வல்லவன்!
அற்ப மானுடன் அல்லன்!
தற்பெருமை என்றுஎண்ணிடல் வேண்டா!
நற்பதங்களைச் சாற்ற வந்தவன்
அற்ப மானுடன் அல்லன்!

கற்பனைக்கெட்டாஅழகிய உலகை
கவியாய்ப் புனைபவன் நான்!
விற்பனைக்கில்லா விலைமிகு மணிகளை
வீதி குவிப்பவன் நான்!
அற்ப மானுடன் அல்லன்- நான்
அற்ப மானுடன் அல்லன்!

சொற்பொருள் வகை சொல்ல வந்தவன்!
சொல்லும் கவியால் வெல்ல வந்தவன்!
விற்பன்னர்களும் வியக்க வல்லவன்!
விதிகளைக் கவியாய் எய்தும் வில்லவன்!
சொற்பம் என்றுஎண்ணிடல் வேண்டா!
அற்ப மானுடன் அல்லன்- நான்
அற்புதங்களை ஆற்ற உள்ளவன்!!

No comments:

Post a Comment