Friday, October 23, 2009

மரபுக் கவிதை - 37



கீதை


''செயல் புரிய மட்டுமே உனக்கு உரிமை உண்டு;
சிந்தித்துச் செயல்படுவாய்,
சிறப்பாய் நன்கு வாழ்வில்.
செயலற்றிருக்க மட்டும் ஆசைப் பட்டிடாதே;
செயல் புரியாமல் வாழ்ந்து,
செத்து மடிதல் வீணே.

பலனை எதிர்பார்த்து நீயும் கடமையாற்றலாகா;
பலனை எனக்கு அர்ப்பணித்து
பல செயல்கள் புரிவீர்.
நலம் பெறுவீர்; நானிலத்தில் புகழ் மிகவே பெறுவீர்''
என்று சொன்ன கண்ணன் சொல்லை
என்றும் மறந்திடாதே!
(எழுதிய நாள் : 28.09.1987)

No comments:

Post a Comment