Sunday, October 25, 2009

மரபுக் கவிதை - 38


தனுஷ்கோடி

ஜயராம் ஜயராம்
ஜயஜய ஜயராம்!
ஜயராம் ஜயராம்
ஜயஜய ஜயராம்!


அரக்கர் குலத்தை அழித்திட அன்று
அனுமன் சேனை அமைத்தது பாலம்!
அதனை நினைத்து எழுவோம் ஒன்றாய்!
அனுமன் போல ஆர்த்திடுவோமே!

இரக்கம்சிறிதும் இல்லாக் கயவர்
இறுதியில் அடைவர் இருளும் இழிவும்!
இனியவை மட்டும் எண்ணுக நண்பா,
இந்திய நாடு உன்னது கனவில்!

காலம் மாறும், கதிகளும் மாறும்,
காவிய ராமனின் கதையினை அறிவோம்!
காட்சிகள் தானாய் மாறிடும், எனினும்
கண்மணி நீயும் காரணமாகு!

எத்தனை நாட்கள் ஏமாறுவது?
எத்தர்கள் எள்ள விட்டிருப்பதுவோ?
இத்தனை போதும் - பட்டவை துயரம்
இனிமேல் நம்மைக் குவலயம் அறியும்!

தன்னை உணர்ந்த அனுமன் ஆவோம்!
தனுஷ்கோடியில் சங்கமம் ஆவோம்!
'தன்'னெனும் ஆணவ மாயை அகற்றி
தவமாய் ராம மந்திரம் சொல்வோம்!

எல்லாம் வல்லான் ஒருவன் உள்ளான்!
எடுத்தவை எல்லாம் வெற்றிகள் ஆகும்!
இல்லான், உள்ளான் பேதமையில்லை!
நல்லான் ஹிந்து - நாமம் பொதுவே!

இந்திய நாட்டின் விதி மாறிடுது;
இந்தெனப் பட்டோர் யாவரும் வருக!
தன்னை உணர்ந்த அனுமன் ஆவோம்!
தனுஷ்கோடியில் சங்கமம் ஆவோம்!
நன்றி: பசுத்தாய்
(ஆவணி 2000 )

No comments:

Post a Comment