Friday, October 2, 2009

மரபுக் கவிதை - 25



உயிர்த் துடிப்பு

எளியதை வலியது வெல்லும் - இதுவே
இயற்கையின் தத்துவமாகும் - வெட்டுக்
கிளியினை உண்ணும் பல்லி - இதுவும்
பூனையின் உணவாய் ஆகும்!
இதுவே உயிரின் துடிப்பு - இதனை
உணர்வது வாழ்வின் படிப்பு - உலக
விதியே 'வலியது வாழும்' - என்னும்
விதமாய் அமைவது ஆகும்!

நன்றி: தினமலர் (ஈரோடு)
(படம் சொல்லும் கவிதை - சிட்டி ஸ்பெஷல் - 06.07.2002)

No comments:

Post a Comment