Sunday, October 18, 2009

புதுக்கவிதை - 29


ஹைக்கூ பூக்கள்

சிரிப்பு
குற்றவாளி சிரித்தான்
சாட்சி இல்லையென.
கடவுளும் சிரித்துக் கொண்டார்.

அழுகை:
அரசியல்வாதி
அழுது கொண்டிருந்தான்.
நேற்று தேர்தல்.

தவிப்பு:
சாக்கடை பரவாயில்லை
சகித்துக் கொள்ளலாம்.
அரசியலை?
நன்றி: விஜயபாரதம்
(26.05.1989)
குறிப்பு: முதன்முதலில் பத்திரிகையில் வெளியான கவிதை இது.

No comments:

Post a Comment