Sunday, October 25, 2009

புதுக்கவிதை - 33


காட்டுமிராண்டி

விடிய விடிய
போஸ்டர் ஒட்டி,
சுவரில் எழுதி
அடி வாங்கி,
எதிர்க்கட்சி மீட்டிங்கில்
பாட்டில் வீசி,
வீட்டை
இருவாரம் மறந்து,
தன் தலைவன்
ஜெயித்தவுடன்
தீ மிதித்து -
தலைவன் சொன்னது போல -
காட்டுமிராண்டி தான்
தொண்டன்.
நன்றி: விஜயபாரதம்
(09.05.1997)

No comments:

Post a Comment