Monday, October 26, 2009

இன்றைய சிந்தனை



பாரதி அமுதம்


முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்த வில் யாருடை வில்? எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல்
ஆரிய ராணியின் வில்!...

ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்
உலகின்பக் கேணிஎன்றே-மிக
நன்றுபல் வேதம் வரைந்தகை பாரத
நாயகி தன் திருக்கை!...

அன்பு சிவம் உலகத்துயர் யாவையும்
அன்பினிற் போகுமென்றே - இங்கு
முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்
மொழி எங்கள் அன்னை மொழி!...
-மகாகவி பாரதி
(பாரத மாதா)

No comments:

Post a Comment