Sunday, October 18, 2009

மரபுக் கவிதை - 34


வலிமை பெறுவோம்!

பாவிகள் யாருமேஉலகினில் இல்லை
பரமனின் பிள்ளைகள், பாவிகளா நாம்?
ஆவி, பேய் என்று அஞ்சுதல் தவறு
அன்னை சக்தியை எண்ணிடுவோம் நாம்!

நாத்திகம் பேசிடும் வல்லவர் ஒழிய
நல்லவர்கள் நாம் ஒன்றுபட்டிடுவோம்
சாத்திரம் கூறும் சொற்படி நடக்க
ஷண்முகநாதனை வணங்கிடுவோம் நாம்!

தாயை வெட்டிப் பிரிவினை செய்த
தண்டனைக் குள்ளோர் நாட்டினில் மீண்டும்
காயம் செய்திட விட்டிடலாமா?
கண்ணனை எண்ணி பலம் பெறுவோமே!
நன்றி: நாளை நமது நாள்- 5
(கையெழுத்துப் பத்திரிகை 1993)

No comments:

Post a Comment