Friday, October 2, 2009

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

பத்திரிகை, ஒரு பெரிய சக்தி. ஆனால், கரையில்லாத நீர்ப்பிரவாகம் எவ்விதம் கிராமப்புறங்களை எல்லாம் மூழ்கடித்துப் பயிர்களையும் நாசம் செய்து விடுமோ, அதேபோல கட்டுத் திட்டத்திற்கு உட்படாத பேனாவும் நாச வேலைக்குத் தான் பயன்படும்.

கட்டுத்திட்டம் வெளியிலிருந்தே வருவதாயிருந்தால், கட்டுத் திட்டமில்லாததை விட அது அதிக விஷமானதாகும். கட்டுத் திட்டம் உள்ளுக்குள்ளிருந்தே வருவதாக இருந்தால்தான் அதனால் லாபம் உண்டு. இந்த நியாயமே சரியானது என்றால், உலகில் இப்பொழுது இருக்கும் பத்திரிகைகளில் எத்தனை இந்தச் சோதனைகளில் தேறும்? ஆனால் பயன் இல்லாதவையாக இருப்பவற்றை யார் தடுத்து நிறுத்துவார்கள்? மேலும் இதில் முடிவு கூறுவது யார்?

பொதுவாக நன்மையும் தீமையும் போல, பயனுள்ளவையும் பயனில்லாதவையும் கலந்து இருந்துகொண்டு தான் வரும். மனிதனே அதில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

-மகாத்மா காந்தி
(சத்திய சோதனை - பக்: 288 )

No comments:

Post a Comment