Wednesday, October 14, 2009

வசன கவிதை - 16


நூறு சதவீத வெற்றிப் பந்தயம்

நூறு மீட்டர் ஓட்டப் பந்தயம்
நூறு பேர் ஓடுகிறார்கள்.
அனைவர் மனங்களிலும்
வெற்றியின் துடிப்பு.
முதலாவதாக வருவது யார்?
இருநூறு கால்கள் ஓடுகின்றன.

வெற்றிக் கோட்டை எட்டும் தருணம்
திரும்பிப் பார்க்க நேரமில்லை.
இலக்கை நோக்கி
அம்புகள் பாய்கின்றன.

ஒருவருக்கே வெற்றிமாலை என
ஒருவரும் ஓயவில்லை.
ஒருநொடிப் பொழுதில்
வெற்றியைப் பறிக்க
நூறு பேரும் அதிதீவிரம்.

ஆனால்-
வெறும் ஓட்டப் பந்தயமல்ல,
தேர்வு.
முயன்று படித்தால் அனைவரும்
மகுடம் சூடலாம்.
அந்த மகுடங்களே
கல்வியின் உப்பரிகைக்கு
படிக்கட்டுகள்.

தேர்வு-
நூறு மீட்டர் ஓட்டப் பந்தயம் அல்ல,
நூறு மீட்டர் வெற்றிப் பந்தயம்.
நன்றி: தினமலர் (ஈரோடு)
(ஜெயித்துக் காட்டுவோம் இணைப்பு- 01.12.2001)

No comments:

Post a Comment