Saturday, October 10, 2009

இன்றைய சிந்தனை



பாரதி அமுதம்

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி! எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி! நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்,
நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர் கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடுநல் அகம்கேட்டேன்,
அசைவறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?
-மகாகவி பாரதி
(கேட்பன)

No comments:

Post a Comment