Saturday, October 31, 2009

புதுக்கவிதை - 36


நன்றி!

நான் நன்றி சொல்வது
சரியாகப் படவில்லை; ஏனென்றால்
எழுதியதே நானல்ல.
எழுதப்பட்டது தான் கவிதையே ஒழிய
எழுதியவன் 'நான்' அல்ல.

அப்புறம் இன்னொரு ஐயம்;
தூக்கம் கேட்டு, துன்பப்பட்டு,
கவிதை எழுதுபவன் நன்றி சொல்ல
அதை
மேலோட்டமாகப் புரட்டிப் பார்ப்பவன்
ஏற்பது முறையாயிருக்குமா?
பரவாயில்லை-
புரட்டப்படுவது தான் கவிதையே ஒழிய
புரட்டுவது நீங்கள் அல்ல.

ஆமாம், 'நன்றி' என்றால் என்ன?
'தன்யவாத்'தா?
'தேங்க்ஸ்'சா?
'நன்றி'ன்னா என்ன?
பரவாயில்லை-
கண்டிப்பாக
நானோ, நீங்களோ அல்ல.

நான் நன்றி சொல்வது
சரியாகப் படவில்லை;
ஏனென்றால்-
இன்னும் நான் எழுதவும் இல்லை-
நீங்கள் படிக்கவும் இல்லை.

(எழுதிய நாள்: 28.03.1994)

No comments:

Post a Comment