Tuesday, October 20, 2009

மரபுக் கவிதை - 35


சிக்கல்

பல்லவி
சிக்கல் சிங்காரவேலா - எந்தன்
சிக்கலைத் தீர்க்க நீ ஓடி வாராய்!

அனுபல்லவி
பக்கல் வந்து பாராமல் - இந்தப்
பாவி மீது என்ன கோபம்?

சரணங்கள்
அக்கம்பக்கம் மனிதரில்லை!
அன்பு காட்ட யாருமில்லை!
தக்க ஒரு துணையுமில்லை!
தண்ணீருக்கும் வழியுமில்லை!

விக்க ஒரு பொருளுமில்லை!
விதியினில் நன்மை இல்லை!
வெக்க, மான, ரோஷமில்லை!
வெந்து வெந்து, புழுங்குகின்றேன்!

No comments:

Post a Comment