Showing posts with label கருவூலம். Show all posts
Showing posts with label கருவூலம். Show all posts

Wednesday, April 20, 2011

சிந்தனைக்கு



கருவூலம்




பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்

பரிந்து நீ பாவியேனுடைய

ஊனினை உருக்கி உள்ஒளி பெருக்கி

உவப்பில்லா ஆனந்தமாய

தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த

செல்வமே சிவபெருமானே

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவது இனியே?



- மாணிக்கவாசகர்

திருவாசகம்- பிடித்த பத்து (9)

.

Tuesday, October 5, 2010

சிந்தனைக்கு


கருவூலம்




ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
பிடியாதிருக்க வேண்டும்

மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவாதிருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழ வேண்டும்

தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே!
-அருட்பிரகாச வள்ளலார்
(திரு அருட்பா- முதல் திருமுறை:8)
.
குறிப்பு: இன்று வள்ளலார் பிறந்த தினம் (1856).
.

Thursday, September 30, 2010

கருவூலம்



பாரதி அமுதம்





தேடிச் சோறு நிதம் தின்று - பல
.....சின்னஞ்சிறுகதைகள் பேசி - மனம்
வாடத் துன்பம் மிக உழன்று- பிறர்
.....வாடப் பல செயல்கள் புரிந்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி- கொடும்
.....கூற்றுக் கிரையெனப் பின்மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
.....வீழ்வேன் என்று நினைத்தாயோ?
-மகாகவி பாரதி
(யோகசித்தி-4)
.

Saturday, September 25, 2010

எண்ணங்கள்


உங்களுக்கும் பிடிக்கும்




தஞ்சைப் பெரிய கோயில் ஆராய்ச்சிக்காகவே தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அளித்தவர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம். பெரியகோயில் சிறப்புகள் குறித்து தமிழ் மரபு அறக்கட்டளைக்கு அவர் திருமதி சுபாஷினி ட்ரெம்மலுக்கு அளித்த நேர்காணல் இது. அரிய படங்கள், ஒளி- ஒலி கட்சிகளுடன் உள்ள இக்கட்டுரை, தற்போதைய கொண்டாட்ட காலத்தை ஒட்டி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

.

Wednesday, September 15, 2010

சிந்தனைக்கு


கருவூலம்




நெடு மதில், நிரை ஞாயில்,
அம்பு உயில், ஆயில், அருப்பம்,
தாண்டாது தலைச் சென்று
கொண்டு நீங்கிய விழுச் சிறப்பின்
தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லைத்
தொன்று மொழிந்து தொழில்கேட்ப
,
வெற்றமோடு வெறுத்து ஒழுகிய
கொற்றவர்தம் கொண் ஆகுவை...
-மாங்குடி மருதனார்
(மதுரைக் காஞ்சி:66-74)
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எனும் பாண்டியனின் புகழைப் பாடியது.
.

Sunday, September 5, 2010

சிந்தனைக்கு

கருவூலம்

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
...திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணி புதுவைப்
...பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை
முப்பதும் தப்பாமே
...இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
...எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய்.
-ஆண்டாள்
(திருப்பாவை-30)
.

Tuesday, August 31, 2010

சிந்தனைக்கு



கருவூலம்




மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்
பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான்
மாணிக்குறளனே... தாலேலோ...
வையமளந்தானே... தாலேலோ...
-பெரியாழ்வார் திருமொழி
(மூன்றாம் திருமொழி -1)
.

Wednesday, August 25, 2010

சிந்தனைக்கு



கருவூலம்


வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்,
கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதல் கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது
ஆனிலை உலகத் தானும், ஆனாது,
உருவும் புகழும் ஆகி, விரிசீர்த்
தெரிகோல் ஞமனன் போல, ஒரு திறம்
பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க!...
-காரிகிழார்
(புறநானூறு- 6 , வரிகள்: 1 -10)
.

Wednesday, August 18, 2010

சிந்தனைக்கு




கருவூலம்






வன்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.
-கவிச்சகரவர்த்தி கம்பர்
(கம்ப ராமாயணம்- பாலகாண்டம், நாட்டுப்படலம்- 53)


.


Sunday, August 8, 2010

சிந்தனைக்கு



கருவூலம்


தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.

-நல்லாதனார்
(திரிகடுகம்- 12)

.

Wednesday, July 28, 2010

சிந்தனைக்கு




கருவூலம்


வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே!


-திருஞானசம்பந்தர்
(தேவாரம்- மூன்றாம் திருமுறை- திருப்பாசுரம்- 572 )

.


Monday, July 26, 2010

சிந்தனைக்கு



கருவூலம்




சொல் தொறுஉம் இற்றுஇதன் பெற்றி என்று அனைத்துஉம்
முற்ற மொழிகுறின் முடிவுஇல ஆதலின்
சொற்றவற்று இயல்ஆன் மற்றைய பிறஉம்
தெற்றுஎன உணர்தல் தெள்ளியோர் திறனே
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுஅல கால வகையின்ஆனே.

-பவணந்தி முனிவர்
நன்னூல் (461 -462)

.

Saturday, July 24, 2010

சிந்தனைக்கு




கருவூலம்



மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.


-குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் (பாடல்:52)


.

Thursday, July 22, 2010

சிந்தனைக்கு




கருவூலம்



...அற்சனை பாட்டேயாம் என்று ஆரூரர்க்கு ஆதியிலே
சொற்றமிழ் பாடுகஎனச் சொன்னமையால் - சொற்படியே
செய்தாய் நால்வேதம் திகைத்து ஒதுங்கப் பித்தன்என்று
வைதாய் நீ வைதாலும் வாழ்த்தாமே - மெய்தான்
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன்
- வருந்தினன் மால்
வெல்லானை தின்ற விளங்கனி ஆனேன் விரகக்
கல் ஆனை தின்ற கரும்பானேன்...


-மதுரை சொக்கநாதர்
தமிழ்விடு தூது (வரிகள்: 147-159)


.

Wednesday, July 21, 2010

சிந்தனைக்கு


கருவூலம்





மெய்ப்பொருள் கண்டு விளங்கும் மெய்ஞ்ஞானிக்குக்
கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கற்பங்கள் ஏதுக்கடி ?

முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி
- குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி ?


காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கோலங்கள் ஏதுக்கடி?
-குதம்பைச் சித்தர் (சித்தர் பாடல்கள்)
.

Tuesday, July 20, 2010

சிந்தனைக்கு



கருவூலம்



கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப
மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே, மணி கண்டு
தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்

மன்பதை காக்குந் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுளென

மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்
கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக்
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று
இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி...

-இளங்கோவடிகள்
(சிலப்பதிகாரம் - மதுரைக் காண்டம்- வழக்குரை காதை- பாடல் வரி: 71 -81 )
.

Monday, July 19, 2010

சிந்தனைக்கு



கருவூலம்



அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.

-வள்ளலார்
(திருவருட்பா- ஆறாம் திருமுறை- பாடல் 4079)


.

Wednesday, July 14, 2010

சிந்தனைக்கு



கருவூலம்






சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்

மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்!



-ஆண்டாளின் திருப்பாவை -29.


.

Monday, July 12, 2010

சிந்தனைக்கு



கருவூலம்




பால்நினைந் தூட்டும் தாயினுஞ்சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினைஉருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே!

-பிடித்த பத்து 9
(மாணிக்க வாசகரின் திருவாசகம்)
.

Sunday, July 11, 2010

சிந்தனைக்கு




கருவூலம்


யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே

(முதல் தந்திரம்:4-13)

-திருமூலரின் திருமந்திரம்




.