Showing posts with label ஆண்டாள். Show all posts
Showing posts with label ஆண்டாள். Show all posts

Sunday, September 5, 2010

சிந்தனைக்கு

கருவூலம்

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
...திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணி புதுவைப்
...பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை
முப்பதும் தப்பாமே
...இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
...எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய்.
-ஆண்டாள்
(திருப்பாவை-30)
.

Wednesday, July 14, 2010

சிந்தனைக்கு



கருவூலம்






சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்

மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்!



-ஆண்டாளின் திருப்பாவை -29.


.