Thursday, September 30, 2010

கருவூலம்



பாரதி அமுதம்





தேடிச் சோறு நிதம் தின்று - பல
.....சின்னஞ்சிறுகதைகள் பேசி - மனம்
வாடத் துன்பம் மிக உழன்று- பிறர்
.....வாடப் பல செயல்கள் புரிந்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி- கொடும்
.....கூற்றுக் கிரையெனப் பின்மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
.....வீழ்வேன் என்று நினைத்தாயோ?
-மகாகவி பாரதி
(யோகசித்தி-4)
.

No comments:

Post a Comment