Tuesday, September 7, 2010

புதுக்கவிதை - 114


பிச்சைக்காரர்கள்


நகரம் முழுவதும் விரட்டிப் பிடித்த
யாசகர்களிடம் கெஞ்சுகிறார்கள
அதிகாரிகள்.

எங்கள் தொழிலில்
கை வைக்காதீர்கள் என
கெஞ்சுகிறார்கள் யாசகர்கள்.

ஆதரவற்றோர் இல்லத்திற்கு
யாசகரைப் போஷிக்கவென
ஒதுக்கிய நிதிக்கு
புகைப்படம் எடுத்தாயிற்று;
நிருபர்கள் சென்றாயிற்று.

இனி துரத்திவிடலாம்
பிச்சைக்காரர்களை...

.

No comments:

Post a Comment