Saturday, September 11, 2010

மரபுக் கவிதை - 108



கணநாதா!




கணநாதா, கணநாதா
ஓம் கணநாதா, கணநாதா!
கணநாதா, கணநாதா
ஸ்ரீ கணநாதா, கணநாதா!

சங்கரன் மைந்தா கணநாதா!
சங்கடம் தீர்ப்பாய் கணநாதா!
அம்பிகை பாலா கணநாதா!
அபயம் அளிப்பாய் கணநாதா!
(கணநாதா)

வினைகள் நீக்கும் விநாயகா!
வெற்றியளிக்கும் வேழமுகா!
தேவர்கள் தலைவா கணநாதா!
தேசம் காத்திட அருள்புரிவாய்!
(கணநாதா)

வேதம் எழுதிய முதல்வோனே!
வேதனை ஓட்டும் வேதியனே!
சந்திரசூடா கணநாதா!
சரணமளித்தே அருள்புரிவாய்!
(கணநாதா)

ஆறுமுகன் அண்ணா கணநாதா!
அறிவுச்சுடரே கணநாதா!
துயரம் துடைக்கும் தூமணியே!
தும்பிக்கையால் அருள்புரிவாய்!
(கணநாதா)

சங்கரன் மைந்தா கணநாதா!
சங்கடம் தீர்ப்பாய் கணநாதா!
அம்பிகைபாலா கணநாதா!
அபயம் அளிப்பாய் கணநாதா!
(கணநாதா)
.
இன்று: ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி
.

No comments:

Post a Comment