Wednesday, September 8, 2010

உருவக கவிதை - 59


பயன்மர இலக்கணம்




மராமரம் காவியம் தந்தது.
மாமரம் கனி தருகிறது.
மரம் எல்லாம் தரும்.
பயன்மரம் வினைத்தொகை;
மனிதர்கள் மரங்களின்
எச்சங்கள்.

உலகம் என்ற ஆகுபெயரில்
மானிடர்கள் வெட்டும்
மரங்களின் வேர்களில் கசியும்
தாய்மையின் ஈரம்.
நிலம் அறியும் உருவகம்:
கோடரிகளுக்கு காம்பு
மரமல்ல.

நுனிக்கிளையில் அமர்ந்து
அடிமரம் வெட்டும்
உவமைத்திறன்
ஓரறிவு மரத்திற்கு
கிடையாது.

மரங்களை இனியும்
மக்கட்பண்புக்கு
உவமை கூறாமல் இருக்கலாம்.
அரம் போலும் கூர்மை
நமக்கு நாமே அறுத்துக்கொள்ள அல்ல.
.

No comments:

Post a Comment