Wednesday, September 1, 2010

மரபுக் கவிதை - 106


கண்ணனின் புன்னகை




கன்னம் குழிந்திடு கவின்மிகு காட்சி
கன்னலை உருவகப்படுத்தும்;
இன்பம், துன்பம் இரண்டும் நிகரென
இனியவன் புன்னகை நிறுவும்!

அண்டம் முழுவதும் விரவியவன் யான்
அனைத்தும் நானெனக் குழியும்;
'நீயும் நான்' எனும் நித்திய உண்மை
நிர்மலமாகவே தெரியும்!

தென்றல் தழுவிடு மெல்லிய உணர்வை
தெளிவுடன் எளிதாய் நல்கும்;
புரிபவையும் நான்; அரியவையும் நான்;
புன்னகையும் நான் - என்கும்!

குறிப்பு: இன்று கோகுலாஷ்டமி.
.

1 comment:

மதுரை சரவணன் said...

கவிதை அருமை. வாழ்த்துக்கள்

Post a Comment