Friday, September 25, 2009

இன்றைய சிந்தனை



கருவூலம்

நாமே நமக்குத் துணையானால்
நாடும் பொருளும் நற்புகழும்
தாமே நம்மைத் தேடி வரும்;
சற்றும் இதற்கோர் ஐயம் உண்டோ?

நெஞ்சிற் கருணை நிறைந்தவர்க்கு
நேயம் கொண்ட நெறியோர்க்கு
விஞ்சும் பொறுமை உடையவர்க்கு
வெல்லும் படைகள் வேறுளவோ?...

கால நதியின் கதியதனில்
கடவுள் ஆணை காண்பீரேல்,
ஞாலம் மீது சுகமெல்லாம்
நாளும் அடைந்து வாழ்வீரே!


-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

(மலரும் மாலையும்)

No comments:

Post a Comment