Sunday, September 13, 2009

வசன கவிதை - 5



இயலுவது எப்போது?

பற்றிப் படர்ந்து பரவுவதற்கு
யார்
கற்றுக் கொடுத்தது கொடிக்கு?

விழுதாய்க் கிழைத்து
அடிமரம் தாங்க
அறிவுறுத்தியது யார்
ஆல மரத்துக்கு?

வெயிலில் பொசுங்கி புதைந்து போனாலும்
ஈரம் பட்டவுடன் இருப்பைக் காட்டும்
அருகம் புல்லுக்கு நம்பிக்கை
கொடுத்தது யார்?

இரையைக் கண்டதும் பதுங்கிப் பாய்ந்து
கவ்வும் பல்லியின் லாவகம்
கற்றது யாரிடம்?

இயற்கையின் அதிசயம்
எத்தனை? எத்தனை?
இத்தனை கண்டும் இயலா மனிதர்கள்
இருப்பது ஏன்?
இயலுவது எப்போது?
நன்றி: மாணவர் சக்தி
(1997)

No comments:

Post a Comment