Tuesday, September 15, 2009

மரபுக் கவிதை - 11



தூயவரின் செய்தி


நல்லவரைத் தேடு- நீ
நல்லவரைத் தேடு!
உலகில் யாரும் தீயவர் இல்லை!
நல்லவரைத் தேடு!


நேரம் தவறாதே- நீ
நியமம் மறவாதே!
பிராணன் உடலில் உள்ள வரைக்கும்
பிறருக்குதவிடுக!


சிறு பணி யேனும் செய்- நீ
சிறிதளவேனும் செய்!
உன்னால் முடிந்த எப்பணி யேனும்
உடனே செய்திடுக!


வாழும் பொழுதெல்லாம் - உன்
சேவை உதவிடனும்!
வாழ்ந்து மறைந்த பின்னரும் கூட
தேகம் பயன்படணும்!

பல மொழி கற்றிடணும் -நீ
பண்டிதன் ஆயிடணும்!
உலகில் எவரும் எதிர்த்த போதிலும்
உயர்ந்து நின்றிடனும்!


லட்சிய உறுதியிலே - நீ
மலையென உயர்ந்திடணும்!
அன்னை பூமியின் அவலம் நீக்கிட
அயராதுழைத் திடணும்!

தர்மம் பேணிடணும் - தாய்
நாட்டைக் காத்திடணும்!
கர்வம் இன்றிக் களப் பணி புரிந்து
காரிருள் அகற்றிடணும்!

இதுவே நற்செய்தி - சிவ
ராம்ஜியின் செய்தி!
சொல்லும் செயலும் ஒன்றென வாழ்ந்த
தூயவரின் செய்தி!
நன்றி: விஜயபாரதம்
(1999, July 09)

No comments:

Post a Comment