Monday, September 28, 2009

மரபுக் கவிதை - 23


அம்பிகை துதி

காஷ்மீர வைஷ்ணவியின் கழல்களினைப் பற்றிடுவோம்!
கடலாடும் பகவதியைக் கரம் கூப்பி வணங்கிடுவோம்!
காசினிக்கு உணவளிக்கும் பூரணியைப் போற்றிடுவோம்!
காஞ்சியிலே வீற்றிருக்கும் காமாட்சி அருள் பொலிக!

பவானி தெய்வத்தின் பதங்களினைப் பற்றிடுவோம்!
கன்னடத்துச்சாமுண்டி ஈஸ்வரியை நினைந்திடுவோம்!
உஜ்ஜைனிக் காளியினை உளத்தினிலே பதித்திடுவோம்!
உமையம்மை மீனாட்சி உறுதுணையாய் விளங்கிடுக!

வங்கத்துத் துர்க்கையினை வாயாரத் துதித்திடுவோம்!
வரம் நல்கும் அபிராமி வதனத்தில் களித்திடுவோம்!
ஒரியாவின் புவனாளும் ஈஸ்வரியைப் பாடிடுவோம்!
காசிநகர் விசாலாட்சி கனிவுடனே நலம் தருக!

நன்றி: விஜயபாரதம்
(10.10.1997)


No comments:

Post a Comment