Tuesday, September 8, 2009

மரபுக் கவிதை - 6



சுவாமி சித்பவானந்தர்

வீரத் துறவியின் விழுதாய்க் கிளைத்து
விளக்காய் இலங்கியவர்
தபோவனத்தைத் துவக்கி ஆன்ம
தானம் வழங்கியவர்

பாக்கியவான்கள் சுயம்சேவகர் என
பாரில் முழங்கியவர்
அந்தர்யோக நிகழ்ச்சிகள் நடத்திய
அறிவின் மேலாளர்

செவ்விய காவி உடையில் மிளிரும்
ஜெகத்தின் அன்பாளர்
மக்கள் தொண்டால் இறைவனைக் கண்ட
மானிடப் பண்பாளர்.

nandri : விஜயபாரதம்
(2000 march 3)

No comments:

Post a Comment