Saturday, September 26, 2009

மரபுக் கவிதை - 19



அருந்தமிழ் வாழி!

அகத்திய முனிவன் நாவில் தவழ்ந்து
எட்டுத்தொகையாய், பத்துப்பாட்டாய்
பதினெண்கீழாய், அகமாய், புறமாய்
தொல்காப்பியரின் இலக்கணமாகி,
அவ்வை வழியாய் அறம்பல கூறி,
அரசனுமாகி, புலவனுமாகி,
அருணகிரியாய், ஆறுமுகமாய்,
ஆழ்வார் பக்திப்பாடல் மிளிர,
நாயன்மார்கள், ஆழ்வாரெனவே
தேகம்கொண்டு தேசம் பரவி,
மக்கள் மூச்சாய், மாதவ வடிவாய்,
என்றும் இளமை குன்றாதவள்எம்
அன்னைத் தமிழே, அருந்தமிழ் வாழி!
கம்பன், இளங்கோ, பாரதி மற்றும்
கண்ணனின் தாசர், கடவுளின் தாசர்,
பற்பல பெரியோர், அற்புதப் புலவர்
எனப்பல உருவம் தாங்கியவளாம்எம்
அன்னை வாழி, அருந்தமிழ் வாழி!
நன்றி: விஜயபாரதம்
(20.11.1998)

No comments:

Post a Comment