Tuesday, September 22, 2009

மொழிமாற்றக் கவிதை - 2



காகித ஓடங்கள்

நாள் தவறாமல் தினமும் காகித ஓடம்
நன்றாகச் செய்ததனில் பெயரெழுதி
மாளாது நான் ஆற்றில் விட்டிடுகின்றேன்
மனிதர் அரிதாகவாழ் ஓரிடத்தில்
யாரேனும் ஒருவரதைக் கண்டெடுத்து
யாருடைய படகென்று அறிவாரென்றே
சோராத எதிர்பார்ப்பு எந்தன் கண்ணில்.
தோட்டத்தில் பறித்திட்ட லில்லிப்பூவை
இன்றையநாள் உதயத்தின் உருவமாக
இதமாகப் படகதனில் ஏற்றிவிட்டால்
கன்றாமல், கவனத்தால் படகு சேர்க்கும்-
காரிருளில், இரவதனில், நம்புகின்றேன்.
-இக்கவிதை குருதேவர் ரவீதிரநாத் தாகூர் எழுதிய 'கீதாஞ்சலி' நூலில் உள்ள 'PAPER BOATS' கவிதையின் மொழிபெயர்ப்பு.

No comments:

Post a Comment