Monday, September 21, 2009

வசன கவிதை - 8



லட்சியப்பொறி

இளைஞனே,
துரத்தும் சவால்களை அஞ்சி
துயரம் கொள்ளவா நீ பிறந்தாய்?

விடியலுக்காக காத்திருப்பதைவிட
நீயே ஏன்
சுடர்விளக்கினை ஏற்றக் கூடாது?

சோர்ந்து கிடக்கும் தோள்களை உலுக்கு.
உன் விழிகளில் வழியும் லட்சியப் பொறியில்
நம்பிக்கை தீபங்கள் உதயமாகட்டும்.

துரத்தும் சவால்களை துரத்தும்போது தான்
வெற்றிப் படிகளில் விரைவாக ஏறலாம்.

இந்த விவேகம் இருந்தால்
வெற்றி நிச்சயம்.
இது விவேகானந்தர் காட்டும்
வாழ்க்கை சத்தியம்.
நன்றி: மாணவ சக்தி
(ஜனவரி 2001 )

No comments:

Post a Comment