Monday, September 7, 2009

வசன கவிதை - 1



உதய ரேகையின் உன்னத ஒளி

உதயரேகையின் உன்னத ஒளி அதோ தெரிகிறது, அதோ...
என்று எண்ணியிருப்பதில் எள்ளளவும் பயனில்லை,
எழு உழவனே எழு.

இனிமேலும் வானத்தை அண்ணாந்து
வரப் போவது எதுவுமில்லை.
விஞ்ஞான யுகம் விரிந்து படருகையில்
மூலையில் முடங்கி
முணுமுணுத்துப் பயனில்லை.
எழு உழவனே எழு.


தன்னம்பிக்கை இழந்து தளர்ந்துபோய்-
கலப்பைக்கு முட்டுக் கொடுத்து,
காத்திருந்து பயனில்லை.
எழு உழவனே எழு.

இந்த பாரதம் உன் விரல் நுனியில்.
பார் உன் கைகளினில்.
எழு -
உன் கைகளைப் பார்.

உதய ரேகையின் உன்னத ஒளி
உன்னிடத்தில் தான் ஒளிந்திருக்கிறது -
எழு உழவனே,
உன் கைகளை சிறிது விரி.

உலகமும் அந்த உன்னதத்தை
உணரட்டும்!

நன்றி: கோவை வானொலி நிலையம்
(2001, பொங்கல் அன்று 'இளைய பாரதம்' பகுதியில் ஒளிபரப்பானது).



No comments:

Post a Comment