Wednesday, September 9, 2009

புதுக்கவிதை - 5



சுதந்திரம் வாழ்வின் ஏணி

சுதந்திரம் என்பது சுவாசக் காற்று
அடைத்திட முயன்றால் அயர்வே கிட்டும்!

சுதந்திரம் என்பது சுகமான ராகம்
இடறிட நினைத்தால் இடிகளும் முழங்கும்!

சுதந்திரம் என்பது பூக்களின் சுவாசம்
சிதைத்திடத் துணிந்தால் புரட்சி வெடிக்கும்!

சுதந்திரம் என்பது அமைதிப் பூங்கா
அழித்திட முயன்றால்அதிரடி உண்டு!

சுதந்திரம் என்பது வாழ்வின் ஏணி
பறித்திட முயன்றால் பதிலடி கிடைக்கும்!

சுதந்திரம் என்பதன் பொருள் மிக சுலபம்
சுதந்திரம் தானே சுகங்களின் உச்சம்!


நன்றி: தினமலர் (ஈரோடு)
15 jan 2001

No comments:

Post a Comment