Tuesday, September 15, 2009

மரபுக் கவிதை - 12








கவி பூஜை


ஜப மாலை உருள்கிறது
ஜக மாயை புரிகிறது

சுப வேளை வருகிறது
சுவடேடு தெரிகிறது

தவ சோபை மிளிர்கிறது
தர வீணை அதிர்கிறது

கவி பூஜை நிகழ்கிறது
கலை வாணி அருள் கனிக!

No comments:

Post a Comment