Tuesday, September 8, 2009

மரபுக் கவிதை - 5


வல்லது வாழும்


வல்லது வாழும் அல்லது நல்லதாயினும்
பயனென் கொல்? வல்லது வாழும்!

புல்லை மிதிக்கும் பொல்லா உலகம்
முள்ளை விட்டுத் தள்ளியே நிற்கும்.

நல்லவ னென்பது வல்லவனுக்கு
கள்ள உலகம் காட்டும் வந்தனம்.

கல்லா னாயினும் இல்லா னாயினும்
கள்ளனைத் தானே கள்ளன் மதிப்பான்?

நல்லவன் என்க மல்லவன் என்க
வெல்ல மறந்தால் மெல்லும் உலகம்


கொல்லவும் துணியும் வல்லவனுக்கே

பல்லைக் காட்டும் புல்லிய உலகம்.

மெல்லிய ஆட்டை மென்றிடுவார்கள்

கொல்லும் வேங்கையை எண்ணிடுவாரா ?

வல்லமை அல்லது வாழ்வினில் துக்கம்

நல்லவை நாடின் வல்லமை பெறுக!

நன்றி: விஜயபாரதம் (2000, jan 28)











No comments:

Post a Comment