Tuesday, September 29, 2009

புதுக் கவிதை - 18



கிராமக் கோயில் பூசாரி

பட்டை துலங்கும் நெற்றி
ஒட்டி உலர்ந்த வயிறு
காவி ஏறிய வேட்டி, துண்டு
கரத்தில் ஒரு குடம்
தொழில் ஒரு கூடை
சவரம் செய்யாத முகம்.
காற்றில் அல்லாடும்
கோயில் தீபம் போலவே
வாழ்வில் அல்லாடும்
பூசாரியின் உலகம்.
நன்றி: விஜயபாரதம்.
(19.11.1999)

No comments:

Post a Comment