Wednesday, September 16, 2009

மொழி மாற்றக் கவிதை - 1



சாவுப்பறை

குலப்புகழ், பெருமை நிலை எல்லாமே
நிழல் தான் - நிலையல்ல!
வலிவிதி முன்னால் படையும் சரியும்,
யமன் அரசருகினிலே
செங்கோல் வீழும்
மகுடமும் தாழும்.
துரும்பாய், தூளாய் மறைந்து போகும்
இரும்பாய் இற்று இழிந்து போகும்!

படைவாளுடனே சிற்சில பேர்கள்
ஆத்தியை அறுத்திடுவர்!
கடைசியில் உணர்ந்து கைவிட்டிடுவர்,
இறைவன் சிரித்திடுவன்:
தொலைவோ, அருகோ
விதிமுன் சருகே.
முணுக்கும் சுவாசம் முற்றுப் போகும்,
பிணக்கும் இணக்கும் அற்றுப் போகும்!

உனக்கணிவித்த மாலை உலரும்
பின் ஏன் வீண்பெருமை?
தனக்கே வெற்றி, தோற்றவர் அடிமை
என்பதும் இழப்புத் தான்:
தலைமாட்டினிலே சவக் குழி
தப்பிட இல்லை ஒருவழி.
சிலதின் விளைவால் திளைத்திடுகின்றாய்,
வலிவிதி அதனால் விளைத்திடுகின்றாய்!

- இக்கவிதை, ஆங்கிலத்தில் ஜேம்ஸ் சேர்லே எழுதிய DIRGE என்ற கவிதையின் தழுவல்.
ஆதாரம்: Learning through pleassure / Macmillan publication- 1986 / page: 69-70.

No comments:

Post a Comment