Wednesday, September 2, 2009

புதுக்கவிதை 1


பூனைக்குட்டி போல!

பால் பூத்தில் சுகமாகத் தூங்குகிறது பூனைக்குட்டி-
பாம்பையும் கிழிக்கும் நகங்களை மறந்து.
பசி இல்லாததால் ருசியும் இல்லை-
பதற்றம் இல்லை; வாலாட்டும் பரபரப்பு இல்லை.
சக்கைப் பாலைக் குடித்துக் குடித்து
எலிவேட்டை ஆடும் வேட்கை மறந்தது.
இருளிலும் ஒளிரும் கண்களை மூடி
நிஜமாகவே தூங்குகிறது பூனைக் குட்டி.
பக்கத்திலேயே பால் பாத்திரம் இருப்பதால்,
தன்னியல்பு மறந்து தூங்குகிறது பூனைக் குட்டி-
பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றும் கவிஞனைப் போல.

நன்றி: vijayabharatham

No comments:

Post a Comment