Friday, September 11, 2009

இன்றைய சிந்தனை


சான்றோர் பொன்மொழி

பிரபஞ்சம் அனைத்திலும் நிறைந்து நிற்பதான சத்திய சொரூபத்தை நேருக்கு நேராக ஒருவர் தரிசிக்க வேண்டுமாயின், மிகத் தாழ்ந்த உயிரையும் தன்னைப் போலவே நேசிக்க முடிந்தவராக அவர் இருக்க வேண்டும். அந்த நிலையை அடைந்துவிட ஆசைப்படுகிறவர் யாரும், வாழ்க்கையின் எந்தத் துறையிலிருந்தும் விலகிவிட முடியாது. அதனாலேயே, சத்தியத்தினிடம் நான் கொண்டிருக்கும் பக்தி, என்னை ராஜீயத் துறையில் இழுத்துவிட்டிருக்கிறது.
சமயத் துறைக்கும் ராஜீயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுவோர், சமயம் என்பதையே அறியாதவர்கள் ஆவர். இதைக் கொஞ்சமேனும் தயக்கமின்றி, ஆயினும் முழுப் பணிவுடன் கூறுவேன்.

-மகாத்மா காந்தி
(சத்திய சோதனை'யில்).

No comments:

Post a Comment