Tuesday, September 22, 2009

உருவக கவிதை - 3



காலநதி

நெளிந்து சுழிந்தோடும்
நதியின் ஆரவார இரைச்சலில்
சென்ற வருட வறட்சி மறந்துபோகிறது.

வேருடன் பெயர்ந்து
உலா வரும் மரங்களினூடே
பூக்களும் குப்பைகளும்
சமத்துவ பவனி.

நதியின் சில்லிப்புக்கு அஞ்சி
படித்துறையில் காத்திருக்கும்
மனிதர்களை எள்ளுகின்றன
வளைந்தோடும் மீன்கள்.

இதுபோல் எத்தனை படித்துறையோ?
எத்தனை மனிதர்களோ?
எத்தனை மரங்களோ?
வண்ண மீன்களோ?
வழிந்தோடுகிறது
காலநதி.
நன்றி: விஜயபாரதம்
(01.12.2000)

No comments:

Post a Comment