Monday, September 21, 2009

இன்றைய சிந்தனை



சான்றோர் அமுதம்

''என் தாய் நாடே,
உன் திருவடிகளில் என் மனதை அர்ப்பணம் செய்துவிட்டேன். என்னுடைய நாவன்மை, எழுத்து வன்மை, என்னுடைய புதுக்கவிதை மணாட்டி யாவற்றையும் உன் திருவடிகளில் காணிக்கையாகச் செலுத்திவிட்டேன். நான் எழுதுவதற்கும் உன்னைத் தவிர வேறு பொருள் இல்லை; உனக்கு நிவேதனமாக எனது அருமை நண்பர் குழாமை அளித்துவிட்டேன். என் இளமை, உடல், போகம் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டேன். உன்னுடய வேலை நீதி நிறைந்ததாகவும் எல்லா தேவதைகளுக்கும் ப்ரியமானதாகவும் இருப்பதால், உனக்குச் செய்யும் சேவை, ரகுவீரனுக்குச் செய்யும் சேவையாகவே எனக்குத் தோன்றுகிறது...

- வீர சாவர்க்கர்.
(பிரிட்டன் அரசால் 1910இல் லண்டனில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டபோது, தனது அண்ணிக்கு எழுதிய 'மரண ஓலை' என்ற கடிதத்தில் உள்ள வைர வரிகள்).

No comments:

Post a Comment