Tuesday, September 15, 2009

புதுக் கவிதை - 11



மீன் தூண்டில்

நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு
உதட்டில் லிப்ஸ்டிக்
கண்களில் கரு மை
தூக்கி கட்டிய பிரா
கன்னத்தில்
மட்டமான பவுடர் பூச்சு
வழிசலான புன்னகை
வா வா என்றழைக்கும்
ஒரு முழ மல்லிகையின்
சுகந்தம்.

பார்ப்பவர்களுக்கு
அது 'ஒரு மாதிரி' தான்.
பார்ப்பவர்களுக்கு கண்ணில் பசி;
அவளுக்கு வயிற்றுப் பசி.
அவள் அப்படித் தான்.

ஊர் ஆயிரம் சொல்லும்.
மீனுக்கு அவள் தூண்டில்
ஆனால்
தூண்டிலில் மாட்டித்
தத்தளிக்கும் வாழ்க்கை
அவளது நிஜம்.

சேலை வாங்குவதற்காக
சேலை களைபவள்
உண்ணும் உணவுக்காக
உடலை விற்பவள்
பெற்றதைப் பேணிட
பெண்மையைத் தருபவள்
விவரம் புரியாமல்
விலைமாதாய் ஆனவள்.
அவளை ஏன்
நிந்திக்கிறீர்கள்?

No comments:

Post a Comment