Tuesday, September 8, 2009

உருவக கவிதை - 1



துணுக்கு

பல்லிடுக்கில் சிக்கிய துணுக்கு
படாத பாடு படுத்துகிறது.
பல முயற்சிகளுக் கப்புறமும்
நாவினுக்குத் தோல்வி.
குண்டூசி எடுத்துக் குத்தப் போய்
ஈறுகளில் ரத்தம்.
வாய் கழுவியும் ஒரு வாளி
தண்ணீர் செலவு தான் மிச்சம்.

பல்லிடுக்கில் நுழைந்த எதிரி
பாடாய்ப் படுத்துகிறது.
ஆனால் -
சிந்தனையைத் தூண்டும்
சின்னஞ்சிறு எதிரியை
எப்போது மறந்தேன்
தெரியவில்லை...
எப்போது போனது என்றும்
புரியவில்லை.


நன்றி: தமிழன் எக்ஸ்பிரஸ்
(1999, June 16-23)

No comments:

Post a Comment