Thursday, September 24, 2009

புதுக்கவிதை - 16



காலம் வரும்

சொட்டைத் தலை,
வழுக்கைத் தலை,
நரைத்த தலை
என்று
யாரையும்
யாருக்கேனும்
அடையாளம் சொல்லாதீர்.

யாரும் ஒரு காலத்தில்
முன் நெற்றி மறைக்கும்
கருகரு சுருள்முடி
கொண்டிலங்கியவர் தான்.

குள்ளன், கூனன்,
நெடுமாறன்,
குண்டன், கருப்பன்
என்றும் சுட்டாதீர்-
யாரும்
யாரையும்
அளவிட முடியாது.

அடையாளம் கூறுபவர்களும்
அடையாளமாகும்
காலம் வரும்-
நானும் கூட
ஒரு காலத்தில்...

No comments:

Post a Comment