Friday, September 18, 2009

மரபுக் கவிதை - 14



திருப் பாதை

வித்தாக என் தந்தை
விளைநிலமாய் என் அன்னை
முத்தாக நான் மலர
முறுவலுடன் பெற்றோர்கள்!

வித்தைக்கு என் ஆசான்
விழைவுக்கு என் நண்பர்
சித்தாக நான் சுடர
சிந்தனைகள் பல உதயம்!

சொத்தாக நற்கல்வி
சொந்தமென குலக்கீர்த்தி
பத்தினியாய் என் மனைவி
பக்கத்தில் நான் பெற்றோர்!

பித்தாக என் அன்பர்
பின்னாலே உறவோர்கள்
இத்தனையும் போதாது
இறைவனவன் என்னோடு!

No comments:

Post a Comment